வெள்ளி, 27 செப்டம்பர், 2013

அன்னையும் பிதாவும்...


அன்னையின் அன்பு அளவற்றது

பிதாவின் பாசம் கரையற்றது

முன்னவர் நேசம் நிகரற்றது

பின்னவர் தியாகம் முடியற்றது

இருவரின் கருணையோ எல்லையற்றது

அளக்க முனைந்தால் அவனியே நோகும் இங்கே

அண்ட விதிகள் அடியற்றுப் போகும்

தன்னலம் இவர்தன்னில் தோற்றுப் போகும் இவர்

தாய்மையைத் தெய்வங்கள் கடன் வாங்கும்

அம்மா உருவில் சேலை உடுத்திய அப்பா

அப்பா உருவில் வேட்டி உடுத்திய அம்மா

தரணிவாழ் உயிருக்குத் தாயும் தந்தையும்

உருவில் இருவர் அருவில் ஒருவரே!


1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...