சனி, 10 மே, 2014

ரெம்பச் சின்னப்புள்ளத்தனமால்ல கீது...?!

“அல்லாம் இந்த துலுக்காணத்தால வந்ததுபா...”

“ஏலே... என்னலே... என்ன சொல்லுத...?” ன்னாரு நம்ப கடையாண்ட வந்த அண்ணாச்சி...

“பின்ன இன்னா அண்த்தே... நம்ப துலுக்காணம் கீறானே... அன்னிக்கி  நம்ப கடையாண்ட வந்து... இன்னா சொல்லிக்கினான் தெர்யுமா...?”

“என்னலே சொன்னான்...?”

வாத்யாரே... எலிக்சன் முட்ஞ்சி ரிசல்ட்டு வுடங்காட்டியும் ரெம்ப பேஜார் பண்ணிக்கிறான்பா கவுருமண்டுல... நீ காண்டி ரெம்ப உசாரா இர்ந்த்துக்கபா... ன்னான்.

இன்னாபா... இன்னா மேட்டரு...? ன்னு கேட்டுக்கினேன் அண்த்தே... அத்துக்கு அவன் இன்னான்றான்...”

“இந்த மேரி வாத்யாரே... நம்ப பையனுக்காண்டி ஒரு பெர்த்து சட்டியேட்டு வாங்கின்லாம்ன்னு தாலுக்கா ஆபீசாண்ட போய்க்கினேம்பா... கசுமாலம் அவன் இன்னான்றான்... இந்த மேரி... இந்த மேரி... எலிக்சன் டைமு... இப்ப ஒன்னியும் கெடியாது... அப்பால வா... பாத்துக்லான்றான்... சர்தாம்பான்னு சொல்லிக்கினு... பத்தர ஆபீசாண்ட போயி... வூட்டுமேல பட்டா குடுடா பேமானின்னு கேட்டுக்கினா... அத்துக்கு அந்த பொறம்போக்கு இன்னான்றான்...  இந்த மேரி... இந்த மேரி... எலிக்சன் டைமு... இப்ப ஒன்னியும் கெடியாது... அப்பால வா... பாத்துக்லான்றான்...”

“இன்னாபா இத்து அநியாயமா கீதே...?”

“கேளு வாத்யாரே... நா காண்டி இல்ல... யாரு போய்க் கேட்டுக்கினாலும்... அல்லா ஆபீசுலயும்... இத்தேதான் சொல்லிக்கினுகீறாய்ங்கலாம்... ரெம்ப மெர்சலா கீதுபா...”

“அட சோமாரிங்களா... கஸ்டமருகாண்டி இல்லாதே... பின்ன யாருக்காண்டி கட வச்சுக்கினுகீறாய்ங்க...?”

“அட இத்து பர்வால்ல வாத்யாரே... நம்ப பக்கிரி கத கீதே... அத்து ரெம்ப பேஜாருபா...”

“இன்னாபா சொல்லிக்கிற...?”

“கேளு வாத்யாரே... எலிக்சனுக்கு மொத நா... நம்ப பக்கிரி நாஸ்தா துண்ணலாம்னு கெய்வி கடையாண்ட போய்னுறாம்பா... அந்தாண்ட வந்த எலிக்சன் ஆபீசரு... ஏய் கசுமாலம் எவ்ளோ துட்டு வச்சுனுகீற...? ன்னு கேட்டானாம்பா... அத்துக்கு இவன் சொல்லிக்கிறான்... இந்த மேரி ஆபீசர்... நாஸ்தா துண்ணுக்லாம்னு பாஞ்சி ரூவா கீதுன்னானாம்... அடிங்க... புரூப்பு இல்லாதே எப்புடி நீ துட்டு வச்சுக்லாம்...?
ன்னு சொல்லி... அந்த துட்ட இஸ்துக்கினு பூட்டானாம் அந்த ஆபீசரு...”

“அய்யே... இன்னாபா இத்து... கூத்தாக் கீது?”

“கேளு வாத்யாரே... நம்ப பக்கிரி இன்னா பண்ணிக்கிறான்... எலிக்சன் பூத்தாண்ட போயி... ஏசன்ட்டு கைல ஓ...ன்னு அய்துக்கிறாம்பா... அத்துக்கு அந்த பொறம்போக்கு... நீ ஒன்னும் மெர்சலாவாத பக்கிரி... எலிக்சன் டைமுல அல்லாம் இப்புடிக்காதான் இர்க்கும்... நீ காண்டி இன்னா பண்ணு... எலிக்சன் அன்னிக்கி நம்ப கட்சிக்கி ஓட்டு போட்டுக்கினு... நேரா எலிக்சன் ஆபீசரண்ட போயி... தகுந்த ஆவணத்தோட துட்டக் கேளு... ஓங் கைல துட்டக் குட்த்துருவான்ன்னு சொல்லிக்கிறாம்பா...”

“ம்... அப்பால...”

“கேளு வாத்யாரே... நம்ப பக்கிரி இன்னா பண்ணிக்கிறான்... எலிக்சன் அன்னிக்கி…  துட்டு வாங்கினதுக்கு ஒரு தபாவும்... ஏசன்ட்டு சொல்லிக்கினான்னு ஒரு தபாவுமா ரெண்டு தபா ஓட்டு போட்டுக்கினு... கொஞ்சம் மப்பையும் போட்டுக்கினு... நேரா... எலிக்சன் ஆபீசராண்ட போயி... தெனாவெட்டா ஒரு லுக்கு வுட்டு... இந்த ஆணவம் போதுமா...? இல்ல... இன்னுங்கொஞ்சம் வேணுமா...? ன்னு சொல்லி... எந் துட்டக் குடுறா பேமானின்னு கேட்டுனுக்றாம்பா... அவ்ளோதான்... அந்த ஆபீசரு காண்டாயி... கசுமாலம் யாராண்ட வந்து இன்னா கேட்டுக்கிற...? ன்னு... செவுள்ல ரெண்டு வுட்டு... டேசனாண்ட இட்டுக்கினு பூட்டானாம்பா...”

“அய்யே... இன்னாபா இத்து பேஜாராக் கீது...? அப்பால இன்னா ஆச்சி...?”

“கேளு வாத்யாரே... நம்ப பக்கிரி சம்சாரம் இல்ல...? அத்து... நம்ப கைல வந்து... ஓ... ன்னு அய்வுதுபா... சர்தாம்மே அய்வாத... நம்ப ஏசன்ட்டு கைல சொல்லி... வெளிய இட்டாந்துர்லாம்மேன்னு சொல்லி... அப்பால... ஏசன்ட்டு கைல மேட்டர அவுத்து வுட்டு... பக்கிரிய ரிலீசு பண்ணிக்றதுக்குள்ள ரெம்பப் பேஜாராப் பூடிச்சிபா...”

“மெய்யாலுமே பேஜாராத்தான் கீதுபா...”

“கேளு வாத்யாரே... நாட்டு நெலவரம் ரெம்ப டரியலாக்கீது... நீ காண்டி உசாரா கடிய மூடிக்லேன்னா... அப்பால அம்பேல்தாம்பா... எலிக்சன் முட்ஞ்சி... ரிசல்ட்டு வுடங்காட்டியும் கடிய தொர்க்காதே வாத்யாரே...
ன்னு கண்டிசனா சொல்லிக்கினான் அண்த்தே...”

“ஓகோ... பொறவு நீ என்னலே பண்ண...?”

“நானும்... சர்தாம்பா... நமக்கு இன்னாத்துக்கு வம்பு...? ன்னு கடிய மூடிக்கினு வூட்டாண்ட குந்திக்கினேன் அண்த்தே...”

“சர்தாம்லே... பொறவு என்னலே ஆச்சு...?”

“அப்பால… ரெண்டு நா மின்னாடி.... டகால்னு வந்துக்கின துலுக்காணம்... வாத்யாரே... வாத்யாரே... இந்தா மேரி ரிசல்ட்டு வுட்டுட்டான் வாத்யாரே... ன்னு குஜாலா சொல்லிக்கினான் அண்த்தே... நானும் அவனாண்ட... சர்தாம்பா... ஒம் மச்சான் இன்னா ஆனான்...? னு கேட்டுன்னேன் அண்த்தே... அத்துக்கு அவன் இன்னான்றான்... வாத்யாரே... நம்ப மச்சான் சோக்காக் கெலிச்சுக்கினான்... அல்லாம் தவுசண்டுக்கு மேல ஏகிறிடிச்சுபா... ன்னு சொல்லி ஜூட் வுட்டுக்கினான் அண்த்தே... நானும்... சர்தாம்பா... அத்தான் அல்லாம் முட்ஞ்சிபோச்சேன்னு சொல்லி... கடிய தொர்ந்க்கினேன் அண்த்தே...”

“அதாம் கடையத் தொறந்துட்டல்ல... பொறவு என்னலே... பெனாத்திட்டுக் கெடக்கே...?”

“கேளு அண்த்தே... கடியாண்ட குந்திக்கினுகீறேன்... நம்ப கபாலி இல்ல கபாலி...? அந்தக் கசுமாலம் இன்னாடானாக்க... நாலு பேர கூட இஸ்துக்கினு வந்து...
இன்னான்றான்... இன்னா வாத்யாரே... ரிசல்ட்டு போடங்காட்டியும் கடிய தொர்ந்து வச்சிக்கினுகீற... கடிய அட்ச்சி ஒடிக்க சொல்லி தலிவர் சொல்லிக்கினாரு... நீ இன்னான்ற...?

“இன்னாபா சொல்லிக்ற...? நேத்திக்கே ரிசல்ட் வுட்டானாமே...?”

“எந்த பேமானி சொல்லிக்கினான்...?”

“நம்ப துலுக்காணந்தான் சொல்லிக்கினான்... அவன் மச்சான் கூட கெலிச்சுக்கினானாமே...?”

“அட சோமாரி... அத்து எலிக்சன் ரிசல்ட்டு இல்லபா... பிளஸ் டூ ரிசல்ட்டுபா...”

“இன்னாபா... சொல்லிக்கிற...? அப்ப அவன் மச்சான் கெலிச்சது...?”

“அட கசுமாலம்... எலிக்சன்ல நின்னுக்கினது அவன் மூத்த சம்சார வகையில மச்சாம்பா... ன்னு சொல்லி... காதக் கொண்டா வாத்யாரே... ன்னு எங் காதாண்ட குசுகுசுன்னு... பிளஸ் டூ ல கெலிச்சிக்கினது... அவனோட கடிசி செட்டப்பு வகையில மச்சாம்பா...ன்னு சொல்லி... கடிசில இன்னான்றான்...

“சர்தாம்பா... நீ நம்பாளா போய்க்கின... நா ஒன்னு சொல்றேன் கேளு... நா... ஓங்கடிய அட்ச்சி ஒட்ச்சா... ஒன்க்கும் புரோசனமில்ல... என்க்கும் புரோசனமில்ல... அத்துனால... நீ இன்னா பண்ணு... நம்ப கைல கொஞ்சமா மாலு வெட்டு... நா ஒன்னிய அடிக்றா மேரி அடிக்றேன்... நீயும் அய்வுறாமேரி அய்வு... அல்லாம் சர்யாபூடும்... இன்னான்றே நீ...?ன்னு கேட்டுக்கினான் அண்த்தே...”

“அடப் படுக்காளிப் பயலுவலா... என்னலே சொல்லுத...?”

“கேளு அண்த்தே... நானும் ரோசன பண்ணிப் பாக்க சொல்லோ... சர்தாம்பா... கடிய லாசு பண்ணிக்காமே... கபாலி கைல மாலு வெட்டி எஸ்கேப்பு ஆய்க்லாம்னு நென்ச்சி... அவன் கைல கொஞ்சம் மாலு வெட்டி... கடிய காவுந்து பண்ணிக்கினேன் அண்த்தே...” ன்னு நா சொல்லி மிடிக்க...

நம்பளே ஏற எறங்க லுக்கு வுட்ட அண்ணாச்சி...

“அடக் கோட்டிக்காரப் பயலே... என்னாலே நீ இம்புட்டு லூசா இருக்கே...? எலக்சன் டைம்ல கவுர்மண்டு ஆபீசுலதாம்லே எல்லா சோலியையும் நிப்பாட்டி வைப்பாம்... ஏ... ஒனக்கென்னலே வந்திச்சு...? பதிவுகளப் போட்டு
ட்டு போய்ட்டே இருப்பியா... அத விட்டுட்டு... எலக்சன் முடியிற வர பதிவு போடாம இருப்பேம்னு... இப்புடி மோசம் போயிட்டியேலே...” ன்றாரு...!

“ஏலே மக்கா... நா இன்னாத்தச் சொல்ல...? இத்து ரெம்பச் சின்னப்புள்ளத்தனமால்ல கீது...?!”


Related Posts Plugin for WordPress, Blogger...