திங்கள், 30 டிசம்பர், 2013

நம்பிள் பேக்ல லுக்ரானில்லபா...

அல்லாருக்கும் வணக்கம்பா...!

இயர் எண்டு ஆய்ட்ச்சுபா... ஆன்னா ஊன்னா... அல்லாரும் தியும்பி... பேக்ல லுக்க சொல்லோ...நம்பளும் பேக்ல லுக்காட்டி எப்டிபா...?

அல்லாரும் சொம்மா லுக்கு லுக்குனு லுக்குனத... நீங்களும் லுக்கி லுக்கி டயர்டாய்ர்ப்பிங்கபா... 

அத்தான்... நம்ப காண்டி... கொஞ்சம் டிப்பரன்ட்டா லுக்கலாம்னு பாத்தாக்க...

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

அப்புடிக்கா லுக்க மிடிலபா...

 

ஏன்னாக்க...  நம்ப நெக் காண்டி... சுள்க்பா... சுள்க்கு...

ஆவட்டும்பா... அல்லாருக்கும் புத்தாண்டு வாய்த்துக்கள்பா...

அப்பால மீட் பண்ணிக்லாம்பா...


 

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

பிரியாணி...


“ஏ... பயலே... நீ ஊத்துற ஊத்துல... அந்த எழவெடுத்த பய, எலக்சன் முடியவரைக்கும் எந்திரிக்கப்புடாதுலே... என்னலே... நாஞ் சொல்லுறத கேட்டுக்கிடுதியாலே...?” என்று, விளக்கு மண்டையில் தாடையை வைத்த சிகப்பு மூஞ்சி வில்லன் போல, சட்டை போடாத மைக் செட் மாரியிடம், தன் சதித் திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தார் வட்டமூஞ்சி அண்ணாச்சி.

சோத்துப் பேட்டை தொகுதியில் இதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த தனது அரசியல் வாழ்க்கையில், புயலென நுழைந்த உசார் பக்கிரியை, "ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை" என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய வேளையில் இந்த நாசகார வேலை அவசியமாகப்பட்டது அவருக்கு.

தமிழக அரசியலைப் பொருத்தவரை, பழம் தின்று கொட்டை போட்டவர்கள் மத்தியில், அந்தக் கோட்டையைக் கூடக் கீழே போடாமல், அதையும், கரமுறவென்று மென்று முழுங்கி, ஏப்பம் விட்டவர் அண்ணாச்சி. 

அவரின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி ஒரே வரியில் கூறவேண்டுமென்றால், “அவரிடம் எல்லா வண்ணத் துண்டுகளும் அதற்குத் தகுந்த கரை வேட்டிகளும் உண்டு...” என்று சொன்னால் போதுமானது. தற்போது அவர் வெள்ளை வேட்டி வெள்ளைத் துண்டில் உலா வந்துகொண்டிருக்கிறார். அப்படியென்றால், அவர் இப்போது குரங்குக் கட்சியில் உள்ளார் என்றும், எந்த நேரத்திலும் எந்தக் கட்சிக்கும் தாவத் தயாராக உள்ளார் என்றும் பொருள்.

எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், கண்டிப்பாக, அதில் ஒரு அங்கமாக அண்ணாச்சி இருப்பார். இங்ஙனம், எந்தவொரு எதிர்ப்புமின்றி, வெற்றிமேல் வெற்றி பெற்று, தனது தொழிலில் சீரும் சிறப்புமாகத் திகழ்ந்து வந்தார் அண்ணாச்சி. ஆனால், இந்த தடவை, தனது செல்வாக்கு சரிந்து, பக்கிரியின் பவிசு கூடிக்கொண்டே வரவும், தோல்வி பயம் அவரைத் தொற்றிக் கொண்டது.

இத்தனைக்கும் அவர், எல்லா அரசியல்வியாதிகளைப் போலவும், “தானுண்டு தனது நன்மை மட்டுமே உண்டு” என்று தொகுதிவம்பிற்குப் போகாமல்தான் இருந்தார். ஆனால் “ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி” என்று கூறிக்கொண்டு, மக்களைக் குழப்பிவிட்டுக் கொண்டிருக்கும், கேசரி வாலாக் கட்சியினரின் தூண்டுதலால், பக்கிரியின் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது.

"மானாவாரியாக எல்லாக் கட்சியினர் மேலும் மக்கள் வெறுப்பாக இருக்கிறார்கள்..." என்பது நாடறிந்த உண்மை. எனவே, இந்தத் தடவை, கழகக் கட்சிகள் முதற்கொண்டு கடைசி பெஞ்ச் கட்சிகள் வரை எதிலும் கூட்டணி வைக்காமல், புதிய வியுகம் ஒன்றை அமைத்துக் கொண்டார் அண்ணாச்சி.

அதாகப்பட்டதாவது, இந்தத் தேர்தலில் “தான் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டு, பக்கிரிக்கு ஆதரவாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, வேட்புமனுத் தாக்கலுக்கு முன், ஏதாவது ஒரு மேடையில் வைத்து, பக்கிரியின் முகத்தில் ஆசிட் அடித்து, அவனை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அவன் இடத்தில் அவனுக்குப் பதில் தான் போட்டியிட்டால், அவனுக்காக வீசும் அனுதாப அலையின் துணை கொண்டு, அவனது ஆதரவாளர்கள் மூலமே தான் வெற்றி பெற்றுவிடாலாம்” என்பதுதான் அண்ணாச்சியின் இராசதந்திரக் கணக்கு.

திட்டமிட்டபடியே எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது. நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஆசிட் அடிக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த விவரங்கள் எதுவுமே தெரியாமல், அண்ணாச்சியின் வலையில் வசமாக வீழ்ந்து கிடந்தான் பக்கிரி.

மீபத்தில் வெளிவந்திருந்த திரைப்படங்களின், விண்ணை முட்டும் விளம்பரப் பலகைகளின் பின்னணியில், சோத்துப் பேட்டை பேருந்து நிலையத்தின் அருகில் அன்றைக்கு மேடை போடப்பட்டிருந்தது.

ஒலிபெருக்கியைக் கையில் பிடித்தபடி, உள்ளூர் அரசியல் முதற்கொண்டு உலக அரசியல் வரை, பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி.

“ஏலே... அமெரிக்காக்காரன்னா... நீ என்ன பெரிய இவன்னாலே...? ஏ... நாங்க வேலக்காரிக்கி சம்பளம் குடுப்போம் இல்ல நாசமத்துப் போவோம்... ஒமக்கென்னலே வந்திட்டு...? ஒஞ்சோலி *யித்தப் பாத்துட்டுப் போவெண்டியதாம்லே...” என்றவர், கூட்டத்தில் கரகோசமும் சீழ்க்கை ஒலியும் எழும்பி அடங்கும் வரை, ஒரு சிறு இடைவெளி விட்டு, தொண்டையைக் கணைத்துக் கொண்டே...

“ஏ... சவத்த மூதி... நீ (மத்திய அரசு) என்னலே நொட்டி வச்சுருக்க...? அமெரிக்காக்காரனுக்கு *** கழுவிட்டுக் கெடக்கே... அவன் வேட்டிய உருவி கோமணத்தோட நிக்க வைலே பாப்பம்...” என்று சீறி முழங்கவும், கூட்டம் ஆர்ப்பரிக்க, அதைத் தன் சைகையால் அடக்கிவிட்டு...

“நீ (மாநில அரசு) என்னலே இங்கே புடிங்கிட்டு கெடக்கே...? ஏ... குடிக்கத் தண்ணி கேட்டா... நீ... சாராயக் கடையல்லே தொறந்து வக்கே... ஏ... வெக்கமால்லே ஒமக்கு...? அவனவன் இங்கே கரண்டு இல்லாம சிங்கியடிக்கான்... ஏ... ஒம்மை ஆருலே அம்புட்டு பேட்டரி போட்டு செவ்வாக் கெரகத்துக்கு ராக்கட்டு விடச் சொன்னாம்....(?!!!) ஏ... சுத்தப் படுக்காளிப்பய கவருமண்ட்டால இருக்கு...”

மக்களின் கரகோசம் விண்ணைப் பிளக்க, அந்த இடைவேளையில், தனக்குத் தரப்பட்ட சோடாவை ஒரு மடக்குக் குடித்து விட்டு...

“ஏ... நீ (இது உள்ளூர் அரசியல்) வந்து... ஒன்னு இருக்குன்னு சொல்லு... இல்ல... இல்லேன்னு சொல்லு... ஏ... கூட்டணி இருக்கா... இல்லையா.... அத மட்டும் சொல்லுலே... ஏ... அத விட்டுட்டு... அவன் போன வாட்டி நல்லா வச்சுக்கிட்டாம்... இந்த வாட்டி தொரோகம் பண்ணிட்டாம்ன்னு ஏம்ல பிலிம் காட்டுத...?”

மீண்டும் கூட்டத்தின் ஆரவாரம் குடுக்கிட, சற்று இடைவெளி விட்டு...

“ஏ... நீ (இது சினமாக்காரன் அரசியல்) நாலு படம் நடிச்சிட்டா... நீ என்ன பெரிய இவனாலே... “ஏ... அந்த ஈரோயினுக்கு ஏம்லே... பைய்நெட்டு வயசுக்கு மேலே ஆக மாட்டிங்கு...? ஏ... நமக்கு ஏம்லே... மண்டை சொட்டையாப் போயிட்டு...?” ஏ... இந்தச் சோலியமட்டும் நீ ஒழுங்காப் பாருலே... ஒமக்கு அரசியல்லே என்னலே சோலி...? ஏ... **ராண்டி... நீ நாலு பேரை சினிமால அடிச்சிப் போட்டுட்டா... ஒமக்கு நாக்காலி கேக்காலே... நாக்காலி...”  என்று ஒருத்தர் பாக்கியில்லாமல் காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சி எடுத்துவிட்டு... இறுதியாக...

“ஏலே மக்கா.... ஒங்களத் தாம்லே கேட்டுக்கிடுதேன்... இந்த வாட்டி அவிங்களத் தூக்கித் தூரப் போடுங்கலே... நம்ப பக்கிரிக்கு ஓட்டுப் போட்டு செயிக்க வைங்கலே... என்ன... கேட்டியளா...? ஏ... அம்புட்டுத்தாம்லே...”  என்று தனது அனல் கக்கும் உரையை முடித்துக் கொண்டு, அடுத்து பக்கிரியைப் பேசுமாறு சைகையில் அழைக்க... மிடுக்காக எழுந்து வந்த பக்கிரி...

“அல்லாருக்கும் வணக்கம்பா... நம்ப அண்ணாத்தே சொன்னா மாறி... சென்ட்ட்ரலும் சரி கெடியாது... இஸ்டேட்டும் சரி கெடியாது... இஸ்டெடியாக்கீரது நம்ப கட்ச்சி ஒண்டிதான்... அதுக்காண்டி... நீங்க அல்லாரும்... பொட்டலம் சின்னத்து மேலே ஓட்டுப் போட்டு... இந்தப் பக்கிரியக் கெலிக்கவச்சுக்கனும்னு கேட்டுக்கிறேம்பா... அப்பால...” என்று அவன் அடுத்து பேசும் முன், அண்ணாச்சியின் கண்ணசைவைப் புரிந்து கொண்ட மைக் செட் மாரி, கையில் சோடா பாட்டில் சகிதம் மேடை ஏறி வந்தான்...

வந்தவன், பக்கிரியின் பால் நெருங்க... அவனைக் கண்ட பக்கிரி... பேச்சை நிறுத்தி விட்டு... பல்லைக் காட்டிக் கொண்டே... அந்த சோடா பாட்டிலை வாங்கத் தன் கையை நீட்ட... கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த அசம்பாவிதம் நடந்தேறி விட்டது...

நேராக வந்த மாரி... சோடா பாட்டிலைப் பக்கிரியின் கையில் கொடுக்காமல்... அவன் முகத்தில்... அதிலிருந்த திராவகத்தை விசிறியடிக்க...

இதைச் சற்றும் எதிர்பார்க்காத பக்கிரி... “ஆஆஆ....ஆ...” என்று அலறி... முகத்தில் பரவும் ஒரு வித எரிச்சலை உணர்ந்து... வாயில் ஏதோ கழுநீர்த்தண்ணீரின் சுவை தெரிய... கண்களை மறைத்த அந்தத் திராவகப் படலத்தை வழித்தெறிந்து விட்டு... உருட்டு விழியுடன் விழித்துப் பார்க்க...

“பேமானி... கசுமாலம்... முக்காத் துட்டு புரோசனம் கீதாயா ஒன்னால... இப்புடிக்காத் துன்னுட்டு... துன்னுட்டு... திண்ணையாண்ட பட்த்துகினுகீறியே... சோமாரி... அந்தாண்ட கட்ச்சிக்காரன் மீட்டிங்கு போட்டுக்கினு... பிரியாணி பார்சல் குடுக்கானாமே... போயி ரெண்டு இஸ்துக்கினு வந்தா இன்னா...” என்று, அவன் முகத்தில், பாத்திரம் கழுவிய நீரை ஊற்றிவிட்டு... பத்ரகாளி போல... பொரிந்து தள்ளிக்கிக் கொண்டு நின்றிருந்தாள் அவனுடைய பிள்ளைத்தாச்சி மனைவி.

வேலை வெட்டி எதற்கும் போகாமல், தண்டச் சோறு தின்றுகொண்டு, எப்படியும், ஒரு முழு நேர அரசியல்வியாதி ஆகிவிட வேண்டுமென்று, கனவு கண்டுகொண்டிருந்த பக்கிரியின் முகத்தில்... அவன் மனைவி அடித்த கழுநீரானது, சற்றுத் தெளிவைக் கொடுக்க...

“நம்ப கெலிச்சு ஆச்சிக்கி வரச் சொல்லோ... இந்தா மாறி... பிரியாணிப் பார்சல... மீட்டிங் காண்டி குடுக்காமே... அல்லார் வூட்டுக்கும்... டோர் டெலிவரி பண்ணிக்கணும்பா...” என்று, தொலைநோக்காகச் சிந்தித்துக்கொண்டே, கூட்டம் நடக்கும் திக்கை நோக்கி அதி வேகமாக நடையைக் கட்டினான் பக்கிரி.
 


வெள்ளி, 13 டிசம்பர், 2013

கோ.க.பொ...

கொஞ்சம் கோக்கு மாக்கான கதைதான்... என்னா பண்றது...? வேற வழியில்ல... சொல்லித்தொலைக்க வேண்டியிருக்கு... ஏன்னாக்க... இது நெசமாவே நடந்த கதை... நாஞ்சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க நம்பித்தான் ஆவணும்...

கதையைக் கவனமாக் கேளுங்க மக்கா... ஏன்னாக்க... இதக் கேட்டதுக்கப்புறமா... நீங்க ஒரு பதில் கதையைத் திருப்பிச் சொல்லணும்... என்னா... நாஞ்சொல்றது புரியுதா...?

ஆவட்டும்... இப்பக் கதைக்குள்ளார போவோம்...
   
குக்குடம்* சமீனுல சமையல் பண்ணுனா வெள்ளக்காயப்பட்டி சமீனுல வாசன வரும். அந்தளவுக்கு நெருக்கமா இருந்துச்சுக ரெண்டு சமீனும். அதுக்காவ ரெண்டு சமீனுக்காரவுகளும் ஒன்னுமண்ணா இருப்பாகன்னு நீங்க நெனச்சுறக்கூடாது. எப்பவும் எலியும் பூனையுமாத்தான் இருப்பாக.

குக்குடம் சமீனுக்குச் சப்பக்கட்டா மஞ்சம்பட்டி சமீனும், வெள்ளக்காயப்பட்டி சமீனுக்குத் தொணையா காரப்பட்டி சமீனும் இருந்துச்சு. இப்புடி இந்தச் சமீனுக ரெண்டுபட்டுக் கெடக்குறதுக்கு என்னா காரணம்னா...? குக்குடம் சோம்பச் சிறுக்கியும், வெள்ளக்காயப்பட்டி கருவாப் புள்ளயும்தான்.

பாண்டிமா ராசா பொண்டாட்டி கூந்தலு, எட்டூருக்கு மணத்துக் கெடந்துச்சுன்னு சொல்லுவாக. ஆனா நம்ப  சோம்பச் சிறுக்கி இருக்காளே,  அவளுக்கு ஒடம்பு பூரா மணத்துக் கெடக்கும். அவளுக்கு ஒன்னும் எளச்சவ இல்ல நம்ப கருவாப் புள்ள. கொல்லிமல மூலிகைக தோத்துப் போயிரும். அம்பூட்டு வாசனையா இருப்பா இவ.

குக்குடம் மைனருக்கு கருவாப் புள்ள மேல கண்ணு, வெள்ளக்காயப்பட்டி மைனருக்கு சோம்பச் சிறுக்கி மேல கண்ணு. இதுகள வச்சுத்தான், இவுகளுக்குள்ள இருக்குதய்யா தீக்க முடியாத பகை.

ஒரு வாட்டி என்னாச்சுன்னா, நம்ப குக்குடம் மைனரு, பகையாளி வேலியத்தாண்டி... மேய்ச்சலுக்குப் போவ, விசயம் வெவகாரமாயிப் போச்சு. கருவாச்சிய கணக்குப்பண்ணப் போனவரக் கையுங் களவுமாப் புடுச்சுப்புட்டாக வெள்ளக்காயப்பட்டி வகையறா.

பொறவென்ன, ஒரே கலவரமாப்போச்சு. அடுப்புவாயன் வீட்டு மாடில பானவவுறன் தலைமையில கூட்டிட்டாக பஞ்சாயத்த.

இந்த அடுப்புவாயனும் பானவவுறனும் யாருனாக்க... இவுகதான் ரெண்டு சமீனுக்கும் பொதுவான ஆளுக. இதே... மத்தவுக வெவகாரமுன்னா மரத்தடியில கூட்டுவாக பஞ்சாயத்த. ஆனா... இது சமீனு வீட்டு வெவகாரமாவுல்ல போச்சு. அதுனால... அடுப்புவாயன் வீட்டுல கூட்டுனாக பஞ்சாயத்த.

ரெண்டூரு சாதி சனமும் அடுப்புவாயன் வீட்டுல கொதிச்சுப்போயிக் கூடிருச்சு.

ரெண்டு சமீனுக சார்பாவும், மஞ்சம்பட்டி மைனரும் காரப்பட்டி மைனரும் மொதல்ல பேச வந்தாக. பேச்சு ஏச்சாகி... கைகலப்புல முடிஞ்சிருச்சு. அவுக ஒரசுன ஒரசுல அந்த எடமே ரொம்ப சூடேறிப் போச்சு. பதறிப் போனாக பஞ்சயத்தாருக. என்னா பண்ணலாம்னு யோசிச்சி, கடைசில... ஒரு அண்டா தண்ணியக் கொண்டாந்து ஊத்திவிட்டாக அவுக மேல.

உள்ள இந்த நெலமையினாக்க, வெளிய அதவிட மோசமா இருந்துச்சு. சண்டைக் கோழி கணக்கா முறுக்கிக்கிட்டு நிக்கிறாக குக்குடம் மைனரும் வெள்ளக்காயப்பட்டி மைனரும். அவுகள மறிச்சி நிக்கிறாக நாலஞ்சு உள்ளிப்பயலுக. எம்புட்டு மறிச்சும் முடியல, வாய்த் தகராறு கைகலப்பாகி கடைசில, வெட்டுக் குத்துல போயி முடிஞ்சிருச்சு.

குக்குடம் மைனரு, சும்மா நொங்கு சீவுராப்புல சீவிப்புட்டாரு வெள்ளக்காயப்பட்டி மைனர. பதிலுக்கு,   வெள்ளக்காயப்பட்டி போட்ட பொட்டுல, கண்டந்துண்டமாயிட்டாரு குக்குடம் மைனரு. இதுல கொடும என்னான்னா... வெலக்கி விடப்போன உள்ளிப்பயலுகளும் நறுவிசா நறுக்குப்பட்டு போயிட்டாய்ங்க.

நெலவரம் ரொம்பக் கலவரமாப் போவவும், பானவவுறனுக்கு வெவரத்தச் சொல்ல ஓடுறான்யா இலவணத்தான்*. அவன் ஓடுறதைப் பாத்த, கண்டந்துண்டாமாப் போன குக்குடம் மைனரு, வெரசன ஓடுறாரு அவன் பின்னாடியே... விடாக்கண்டனாத் தொரத்திகிட்டே ஓடுறாரு வெட்டுப்பட்ட வெள்ளக்காயப்பட்டியாரு...  என்னடா இது இம்சையாப் போச்சுன்னு பின்னாலே ஓடுறாய்ங்க உள்ளிப்பயலுக வகையறா...

வெளிய வேடிக்க பாத்த மிச்ச சாதி சனமும் ரொம்பக் கொதிச்சுப்போயி கூடுறாக அடுப்புவாயன் வீட்டுல.

மேல, பானவவுறன் பஞ்சாயத்துல என்னடான்னாக்க, நெலம மேலும் சூடாயிருச்சு. ஏற்கனவே மஞ்சம்பட்டியாரும் காரப்பட்டியாரும் மல்லுக்கு நின்ன எடத்துல, இப்ப குக்குடம் மைனரும் வெள்ளக்காயப்பட்டியாரும் சேந்துக்க, ஒரே கசமுசாவாகிப் போச்சு. இதுக்கு எடையில மாட்டிக்கிட்டு முழிக்கிறாய்ங்கய்யா நம்ப இலவணத்தானும், உள்ளிப்பயலுக வகையறாவும்.

உள்ள இப்புடிக் கூத்து நடக்க, வெளிய என்னடானாக்க, சோம்பச் சிறுக்கியும், கருவாப் புள்ளயும் ஒரு தீர்மானம் பண்ணிப்புட்டாளுக. அது என்னானாக்க, கருவாப் புள்ளயப் பாத்து சோம்பச் சிறுக்கி...

“அடியே இவளே... எதுக்குடியம்மா நமக்குள்ள வம்பு வழக்கு, பேசாம... நம்ப ஒரு காரியம் பண்ணலாம்... குக்குடம் மைனர நீ கட்டிக்க... வெள்ளக்காயப்பட்டி மைனர நாங்கட்டிக்கிறேன்... எல்லாம் ஒன்னுமண்ணாப் போயிறலாம்... நீ என்னாடி சொல்லுற...” ன்னு கேக்க...

“யக்கா... அது என்னக்கா அப்புடிச் சொல்லிப்புட்ட...? நீ சொல்லி நா எதக் கேக்காமே போனேன்... நீ சொல்றாமாறியே... செஞ்சுக்கலாம்க்கா...” ன்னு சம்மதம் சொல்லிப்புட்டா கருவாப் புள்ள...!

பொறவென்ன...  சாதி சனமெல்லாம் சந்தோசமாயிப் போச்சு... “பொட்டப் புள்ளகளுக்கு இருக்க புத்தி... அந்தப் பொசகெட்ட பயலுகளுக்கு இல்லாமப் போச்சே...” ன்னு சொல்லி ஆகவேண்டிய காரியத்தப் பாத்தாக.

எள்ளெண்ணையக் காச்சி, சோம்பச் சிறுக்கியயும் கருவாப் புள்ளயயும், அதுல குளுப்பாட்டி... தாலி கட்ட ஏற்பாடு பண்ணுறாக... இவளுக குளிச்ச குளியில... ஊரே மணத்துக் கெடக்குதைய்யா மணத்து...!

இது இப்புடியிருக்க, அங்க பானவவுறன் பஞ்சாயத்துல என்னடானாக்க, ஊத்துன அண்டாத் தண்ணி சுண்டிப் போகவும்... பஞ்சாயம் பேசி முடிக்கவும் சரியா இருந்துச்சு. பேச்சு வார்த்தை முடிவுல... இதுல “யாரு குக்குடம் மைனரு... யாரு வெள்ளக்காயப்பட்டி மைனரு... யாரு இலவணத்தான்... யாரு உள்ளிப்பயலுக வகையறா” ன்னு தெரியாம... ஒன்னுமண்ணாப் போயிட்டாக எல்லாரும்.

கடைசில... ஒன்னுமண்ணாப் போன அவுகளையும்... தாலி கட்டத் தயாரா இருந்த சோம்பச் சிறுக்கியையும்  கருவாப் புள்ளையையும்... மொத்தமாக் கூட்டியாந்து... கண்ணாலத்தப் பண்ணி வச்சுட்டாக பஞ்சாயத்தாருக.

இப்புடி... அவுகளுக்குக் கண்ணாலத்தப் பண்ணி வச்சவுக...   “அடே போக்கத்த பயலுகளா... இனிமே சமீனுமில்ல... ஒரு மண்ணுமில்ல... எல்லாப் பயலுகளும் ஒண்ணுதான்... அதுனால... இனிமே எல்லாரும்... புதுசாக் கட்டிக்கிட்ட இதுகள... ‘கோ.க.பொ’ ன்னுதான் கூப்புடணும்... என்னா... எல்லாருக்கும் புரியுதா...?” ன்னு கேக்குறாக சாதி சனத்தப் பாத்து...

சாதி சனமெல்லாம்... “அப்பாடா... இனிமே கலவரம் இல்லாம நிம்மதியா இருக்கலாம்...” ன்னு நெனச்சுக்கிட்டு...  புதுசாக் கட்டிக்கிட்டவுகளக் கொண்டுபோயி... வட்டத்தட்டான் வீட்டுல குடி வச்சுப்புட்டாக...

என்ன மக்கா...? நாஞ்சொல்லிவாரத இன்னும் நீங்க நம்பலைல... நாந்தான் முன்னாடியே சொன்னேனே... இது ஒரு கோக்கு மாக்கான கதைன்னு...

என்னமோ... நாஞ்சொல்றத சொல்லிப்புட்டேன்... அதுக்குமேலயும் ஒங்களுக்கு நம்பிக்க வரலன்னா... நீங்களே போயி... அவுக குடும்பம் நடத்துற அழக... பாத்துத் தெரிஞ்சுக்கங்களேன்...

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
என்ன மக்கா...? வந்துட்டிகளா...? இங்க பாருங்க... இவுகதான் நாஞ்சொன்ன கோ.க.பொ...


அட...! என்ன முழிக்கிறீக... இன்னுமா தெரியல... இவுகதான் மேற்படி...

“கோழிக் கறிப் பொரியல்...!!!”

அம்ம்புட்டுத்தேன்... கதை முடிஞ்சு போச்சு...!


இப்ப... நீங்க என்னா பண்ணனும்னாக்க... இந்தக் கதைல... யாரு யாரு வர்றாக... அவுக... எந்தெந்த வகையில சேர்மானஞ் சேந்து... கடைசில... இப்புடிக் “கோழிக் கறிப் பொரிய” லாப் போயிட்டாகன்னு... பின்னூட்டத்துல சொல்லுங்க மக்கா...



பின்னால ஒரு குறிப்பு: மேல பிச்சர்ல கீற கோ.க.பொ... போன நாயித்துக் கெயம... நம்ப கைலேயே செஞ்சிகினதுபா...


அப்பாலிக்கா இன்னோரு பின் குறிப்புபா: குக்குடம்* - ?, இலவணம்* - ? ; நீங்கல்லாம் ரொம்ப புத்திசாலிக... எப்புடியும் இதெல்லாம் கண்டு புடுச்சுருவீகன்னு எனக்குத் தெரியும் மக்கா... அதான்... இதுக்கெல்லாம் நா அருஞ்சொற் பொருளு குடுக்கல... ஏதோ எனக்குத் தெரிஞ்ச வார்த்தைகளச் சொல்லிருக்கேன்... “இதில் ஏதேனும் சொற்குற்றம் பொருட்குற்றம் இருப்பின்... புலவர் பெருமக்கள், தயை கூர்ந்து இந்த அற்பனை மன்னித்து... பிழைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும்”னு தாழ்மையோட கேட்டுக்கிறேன்பா...


சனி, 7 டிசம்பர், 2013

பல்லு பிச்சை...

த்து காண்டி முட்டா நைனா எய்தி கீச்சதை அல்லாம் பட்சி ரசுச்சுகின அல்லாருக்கும் வணக்கம்பா...!


மொத தபா எய்த சொல்லோ... இம்மா ரெச்பான்சூ இர்க்கும்னு முட்டா நைனா மெய்யாலுமே நென்ச்சுப் பாக்கலேபா...  அல்லாரையும் லைன்லே வந்து பட்சிக்க சொல்லி, கண்ட்ரோலு பண்ணி... கண்ட்ரோலு பண்ணி... முட்டா நைனா படா டயர்டு ஆய்க்கினாம்பா... ஸ்ஸ்ஸ்ஸப்பா... மிடிலபா...

பர்ஸ்ட் ஆளா வந்துகினு, நம்ப இடுகைலாம் பட்சி பாத்து கர்த்து சொல்லி, அப்பால டமில்மணம் மொய்யி வச்சி, இப்புடிக்கா படா சோக்கா நம்பளே என்கரேசூ பண்ணிகீறார்பா நம்ப டிண்டிகல்  தன்பாலு... அவர்காண்டி முட்டா நைனா பெசல் டேங்க்ஸ் சொல்லிக்கிறான்பா...

நம்பளே மாறி அப்ரசண்டுக்லாம்... டமில்மணம் மொய்யி வக்கிற சனநாயகக் கடமே பத்தி... சோக்கா கிளாஸ் எட்த்து... அத்தே டெமான்ஸ்ரேசன்  பண்ணிக் காட்டிக்கினார்பா நம்ப நம்பள்கி வாத்யார்... நம்ப டிண்டிகல் தன்பாலு மாறியே, அல்லா  இடுகையும் பட்சி பாத்து, கர்த்து சொல்லி நம்பளே என்கரேசூ பண்ணிகீறார்பா... அவர்காண்டியும் முட்டா நைனா டேங்க்ஸ் சொல்லிக்கிறான்பா...

நம்ப எய்த்த பட்சி பாத்து கர்த்து சொல்லிக்கினு, அப்பால... சோக்கான டிப்ப்சுலாம் சொல்லிக்கினார்பா நம்ப பால் கணேசு... அவர்காண்டியும் நம்ப டேங்க்ஸ்பா...

கண்டிணீவா வந்துகினு கர்த்து சொல்லிகிறார்பா நம்ப ரூபன் அண்ணாத்தே... ரெம்ப டேங்க்ஸ் அண்ணாத்தே...

அப்பால, நம்ப எயித்தாளர் கோவை ஆவி... நம்பளே ரெஸ்பீட்டு பண்ணி... மிஸ் பண்ணாம வந்து கர்த்து சொல்லிகிறார்பா... அவர்காண்டியும் ரெம்ப டேங்க்ஸ்பா...

நெக்ஸ்ட்டு, நம்ப  தொள்சிதரன் அண்டு கீதா கீறாங்கப்பா... "ஏய் முட்டா நைனா... நீ சோக்கா டமில் பேசுது... படா சோக்கா ஸ்டோரி சொல்லுது..." அப்புடிக்கான்னு சொல்லி நம்பளே படா குஷி பட்துறாங்கபா... அவ்ங்கலுக்கும் ரெம்ப டேங்க்ஸ்பா...

அப்பாலிக்கா, நம்ப வூட்டாண்ட வந்து, கர்த்து சொல்லி நம்பளே என்கரேசூ பண்ணிகிற, நம்ப சுரேசு, வி.பி. திரு, மூங்கி காத்து மொர்ளி, நிசாமுதீன், பகவான்சீ (சோக்காளி), கவியாழி கண்ணதாசன் அல்லாருக்கும் ரெம்ப  டேங்க்ஸ்பா...

ரெண்டு பெசல் வி.ஐ.பி  கீறாங்கபா... நம்ப கலாகுமரன் அண்டு பால் கணேசு... வலைச்சரத்துல, "இந்தா மாறி... இந்தா மாறி.. முட்டா நைனா... முட்டா நைனான்னு ஒரு எலக்கியவாதி, படா சோக்கா... ரெம்ப டமாசா எய்தி கீச்சுகினுகீறார்பா... அல்லாரும் போயி பட்சி பாத்து கர்த்து சொல்லுங்கபா" ன்னு இன்றோடசன்  குட்த்துக்கினாங்கபா... ரெம்ப டேங்க்ஸ்பா...

இத்து அல்லாத்துக்கும் மேலே... நம்ப வூட்டாண்ட விசிட்டு குட்த்து... பட்சி பாத்துகினு... கர்த்து ஏதும் சொல்லிக்கிறாமே... சைலண்ட்டா ஜூட்டு வுட்டுகினுகீறாங்களே... அவ்ங்க அல்லாத்துக்கும் முட்டா நைனா டேங்க்ஸ் சொல்லிக்கிரான்பா...

அப்பாலிக்கா, முட்டா நைனா வலை தளம் அண்டு கூகிள் பிளஸ்ல ரிஜிஸ்டரு பண்ணி... நம்பள பாலோ பண்ணிகிறவுங்கலுக்கும், மொகநூலு, டுவிட்டரு அண்டு ஈ-மெயிலு அல்லாத்துலயும் பாலோ பண்ணி(லைக்கு)கிற அல்லாத்துக்கும் முட்டா நைனா டேங்க்ஸ் சொல்லிக்கிரான்பா...

நெக்ஸ்ட்டு... இன்ட்லி, டமில் 10 அண்டு ஆல் திரட்டிகள்லயும், முட்டா நைனா இடுகைக்லாம் ஓட்டு போட்ட அல்லாருக்கும் ரெம்ப ரெம்ப டேங்க்ஸ்பா... 

அப்பால... முட்டா நைனா லிஸ்ட்டுல யாருனா மிஸ் ஆய்க்கினா... மெர்சலாவாதீங்கபா... மிஸ்சான அல்லாத்துக்கும் முட்டா நைனாவோட "மிஸ்சுடு" டேங்க்ஸ்பா...  

ஆவட்டும்பா... இன்னாடா இத்து... இன்னாமோ ஒரு டைட்டிலு குட்த்துகினு... ஒரு லின்க்குமில்லாதே பினாத்திகினுகீரானேன்னு.... மெர்சலாவாதீங்கபா... 

இந்தா ஆச்சிபா... இப்போ... டைட்டில் மேட்டருக்கு வர்வோம்பா...

முட்டா நைனா பிளாக்குக்கு ஐடியா குட்த்து... டெக்கினிக்கல் சப்போர்ட்டு குட்த்து... ஒரு ஒரு தபாவும் இடுகை போட சொல்லோ... அட்டுவான்சா... புரூப்பு  ரீடிங் பண்ணி... எய்த்து பியை அண்டு கர்த்து பியை அல்லாத்தையும் கண்டுக்கினு... பட்டி பாக்க... டிங்கரிங் பாக்க... அல்லாத்துக்கும் எல்ப்பு பண்ணிகினுகீறார்பா...ஓர் பிரண்டு...

அத்து வேற ஆருமில்லபா...  அவுருதாம்பா... நம்ப... 


அவருகாண்டி முட்டா நைனா டபுள் பெசல் டேங்க்ஸ் சொல்லிக்கிரான்பா...

அப்பால இத்தே மாறி... அல்லாரும்... முட்டா நைனாக்கு... ஆல் டைம் அம்பும் ஆத்ரவும்  குட்துக்கனும்னு முட்டா நைனா ரெக்கொஸ்ட்  பண்ணிக்கிறாம்ம்பா...

ஆவட்டும்பா... முட்டா நைனா ஜகா வாங்கிக்கிரான்பா...
 
பின் குறிப்புபா: ஒரு ஒரு தபாவும்... முட்டா நைனா இடுகைக்கு... படம் போட சொல்லோ... எல்ப்பு பண்ணிகிற பெஞ்சக் குச்சி, பேப்பரு அண்டு அல்லி லப்பரு அல்லாத்துக்கும் ரெம்ப டேங்க்ஸ்பா...

அப்பால ஒரு பின் குறிப்புபா: நம்ப இடுகைல, பதிவர்கள் பேர் ஒண்டி சொல்லிக்கினேம்பா... இன்றோடூஸ் பண்ண "லிங்கு சாமி"லாம் குட்க்லபா... அத்து ஏன்னு... மல்லாக்கப் பட்த்து... நீங்களே ரோசனை பண்ணிப் பாத்துகினுங்கபா...

அப்பாலிக்கா இன்னோரு பின் குறிப்புபா: இத்தெல்லாம் இஸ்ட்ரில வந்து... ஆலிவுட்ல படமா எட்த்து... ஆஸுகாரு அவார்டுலாம் குட்ப்பாங்கனு... நம்ப  துல்க்கானம் சொல்லிக்கினாம்பா...   

செவ்வாய், 3 டிசம்பர், 2013

தலை இல்லா முண்டம் - பாகம் 6


முந்தைய பாகங்களைப் படிக்க அந்தந்தத் தலைப்பைச் சொடுக்கவும்...

முன் குறிப்பு: இப்பதிவில்  வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

ங்ஙனம், தலையில்லா முண்டத்தின் தாக்குதலுக்குப் பயந்து, ஒரே தாவலில், அம்மாளிகையின் வேலிச் சுவரைத் தாண்டி வெளியே குதித்தான் கரடிமணி. ஆனால்... அவன் போதாத நேரம்... அங்கே... மீண்டும்... தலையில்லா முண்டத்தின் மேலேயே விழுந்தான் அவன்...


அடுத்த நொடி, குலைநடுங்க வைக்கும் கொடூரமான அலறல் அவன் காதுகளுக்கு மிக அருகாமையில் ஒலித்தது. பலமானதொரு இரும்புக் கரத்தின் பிடியில், பொறியில் அகப்பட்ட எலிபோல் தாம் சிக்குண்டு கிடப்பதை உணர்ந்தான் அவன். இருட்டில் எதுவும் புலப்படவில்லை.

ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு. “என்ன எழவுடா இது...? தொரத்திக்கிட்டு வர்ற தலையில்லா முண்டத்துக்கிட்டேர்ந்து தப்புச்சுட்டோம்னு பாத்தா... திருப்பியும் அதுமேலேயே எப்புடி வந்து விழுந்தோம்...?" என்று மிகவும் குழம்பிப் போனான் அவன்.
 
எப்பேர்ப்பட்ட இக்கட்டிலிருந்தும் தப்பித்துவிடும் திறமையுள்ளவன், இந்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினான். பலமாக அடிபட்டதன் விளைவாகத் தனது உடலையும் அவனால் அசைக்க இயலவில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் செயலிழந்து கிடந்தவன்... தன் பலம் முழுவதையும் திரட்டி... எழ முயன்ற அதே வேளை... சற்றும் எதிர்பாரா அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

கோடி சூரியன்கள் ஒரே நேரத்தில் அவன் கண் முன்னே வெடித்துச் சிதறின. அண்ட சராசரங்களே அதிரும்படியான இடி முழக்கத்துடன், மேலும் ஒரு தலையில்லா முண்டம் அவன்மேல் பாய்ந்தது. எதிர்பாரா அந்தத் தாக்குதலில் முற்றிலும் நிலைகுலைந்து போனான் கரடிமணி. 

திண்டுக்கல் மலைக்கோட்டையே உருண்டு வந்து தன் மேல் விழுந்ததாகப்பட்டது அவனுக்கு. சாவு பயம் தன்னைத் தொற்றிக்கொள்ள “அவ்வளவுதான்... செ...த்...தோ...ம்...” என்ற நினைப்பு மேலோங்குவதற்கு முன்...  அடியற்ற மரம் போல், மூர்ச்சையாகிக் கீழே விழுந்தான் அவன்.

ரடிமணி கண் விழித்துப் பார்த்த போது, அவனுக்கு முன்னால் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட வஸ்து ஒன்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. எங்கு நோக்கினும் ஒரே வெண்புகை மண்டலமாக இருந்தது. அதனூடே, தான் மிதந்து கொண்டிருப்பது போல் உணர்ந்தான் அவன். மேலும், அவனைச் சுற்றி, வெள்ளை உருவங்கள் பலவும் மிதந்து கொண்டிருப்பது மங்கலாகப் புலப்பட்டது.

சிறிது நேரத்திற்கெல்லாம், வெண்புகை மண்டலம் தெளிவடைவதைப் போல உணர்ந்தவன், தனது தலையிலும் உடம்பிலும் வெண்பட்டுத் துணியால் கட்டுகள் போடப்பட்டிருப்பதையும், உடம்பெல்லாம் ஏதோ ஒரு இனம்புரியாத வேதனை பரவியிருப்பதையும் உணர்ந்தான். 
 

சிறிதுநேர வலி ஆராய்ச்சிக்குப் பின், அங்ஙனம் தனக்கு முன்னால், ஊஞ்சலாடிக் கொண்டிருப்பது தன்னுடைய வலது கால்தான் என்று அறிந்து கொண்டான் அவன். மேலும், வெள்ளை உடை தரித்த நரசம்மாக்களின் நடமாட்டத்தை வைத்து, தான் படுத்திருப்பது பெரியாஸ்பத்திரி என்றும் கண்டுகொண்டான் கரடிமணி.

அவனுக்கு இருபுறமும் உள்ள படுக்கைகளில், ஏட்டு எசக்கியும், காவலர் கந்தசாமியும் படுத்துக் கிடந்தனர். அவர்களுடைய உடம்பிலும் ஆங்காங்கே கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தாம் எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்று தெரியாமல் மிகவும் குழம்பிக் கிடந்தான் அவன்.

சிறிது நேரத்தில், சிரித்த முகத்துடன் சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமி, காவலர் இருவர் புடை சூழ அங்கே வருகை புரிந்தார்.

வந்தவர், நேராக ஏட்டு எசக்கியிடம் சென்று, “கங்ராட்ஸ்லேசன் ஏட்டு, தலையில்லா முண்டத்தைப் புடிச்சியோ இல்லையோ, கடைசில, நம்ப கரடிமணியைப் புடிச்சிட்டு வந்துட்டியேய்யா...” என்று பாராட்டினார்.

மேலும், நடந்த விவரங்களை ஏட்டையாவிடம் விசாரித்து விட்டு, காவலர் கந்தசாமிக்கும் ஆறுதல் சொன்னார். கரடிமணியின் நிலமையை மருத்துவர் மூலம் விசாரித்து அறிந்தவர், மீண்டும் ஏட்டையாவிடம் வந்து, "மேலிடத்துல சொல்லி புரமொசனுக்கு ஏற்பாடு பன்றேய்யா... நீ ஒன்னும் கவலப் படாத... தைரியமா இரு..." என்று தைரியம் சொல்லிவிட்டு மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களைக் கவனிக்கச் சென்றார்.

"இவ்வளவு நாள் பட்ட துயரத்துக்கு கைமேல பலன் கிடைக்கப் போவுது..." என்று புளகாங்கிதப் பட்டுக் கொண்டார் ஏட்டையா. காவலர் கந்தசாமிக்கோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.

கரடிமணியின் நிலையோ கவலைக்கிடமாகவே இருந்தது. தான் இங்ஙனம் அடிபட்டு, பிடிபட்டுவிட்டதைக் கூட அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்ன நடந்தது என்று தெரியாமல் தான் இப்படிக் குழம்பிக் கிடப்பதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

நடந்த விசயம் இதுதான். நாட்டு நாய்களையே இதுவரை பார்த்து வந்திருந்த கரடிமணி, புசு புசுவென்ற மயிருடன் எருமைக் கன்றுக்குட்டி உயரத்தில், உயர் சாதி வீட்டு நாய்களை அவன் வாழ்நாளில் பார்த்ததில்லை. அன்றைக்குத் திருடப் போன மாளிகையில், அங்ஙனம் உள்ள ஒரு நாயைப் பார்த்துத்தான், தலையில்லா முண்டமென்று பயந்து ஓடிப்போய், வேலிச்சுவரைத் தாண்டிக் குதித்தான்.

அதே வேளையில், மேற்படி தலையில்லா முண்டத்தைப் பிடிக்க, தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு, ஏட்டு எசக்கியும் காவலர் கந்தசாமியும், அம்மாளிகையின் வேலிச்சுவரை ஒட்டிய வீதியில் ரோந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஏட்டையாவின் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு முன்னால் போய்க் கொண்டிருந்தார் காவலர் கந்தசாமி. அங்ஙனம், வேலி தாண்டிக் குதித்த கரடிமணி, காவலர் கந்தசாமி தள்ளிக்கொண்டு போன ஏட்டையாவின் மிதிவண்டியின் மேல் விழுந்து விட்டான்.

சற்றுத் தொலைவில் பின்னால் வந்து கொண்டிருந்த ஏட்டு எசக்கி, திடீரென்று தனக்கு முன்னால், நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிட்ட, அந்தத் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியானார். அம்மாவாசை இருட்டில், அவருடைய கைவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில், அவருக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதை அவரால் சரியாக ஊகிக்க இயலவில்லை. காவலர் கந்தசாமி கீழே கிடக்க, அவர்மேல் ஏட்டையாவின் மிதிவண்டி கிடக்க, அதற்கும் மேலே கரிய பெரிய ஒருவம் ஒன்று அசைய, அதே நேரம், காவலர் கந்தசாமியின் அலறலும் கேட்க அதற்குமேல் ஒரு நொடியும் தாமதிக்காத ஏட்டு, அத்தாக்குதலைச் சமாளிக்கும் பொருட்டு, ஒரே பாய்ச்சலாகக் கரடிமணி மேல் பாய்ந்து, கோழியை அமுக்குவது போல் ஒரே அமுக்காக அவனை அமுக்கிவிட்டார்.

நடந்த இந்த சம்பவங்களில், ஏட்டையாவின் மிதிவண்டியின் மேல் விழுந்ததால், கரடி மணிக்கு ஒரு கால் உடைந்து போயிற்று. மற்ற இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

ட்டையாவின் இந்த என்கவுண்டருக்குப் பரிசாக, அவருக்கு சப்-இன்ஸ்பெக்டராகவும், காவலர் கந்தசாமிக்கு ஏட்டாகவும் பதவி உயர்வு கிடைத்தது. காலுடைந்த கரடிமணிக்கோ, அவனுடைய கைங்கர்யத்திற்குப் பரிசாகக் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.

ஏட்டையாவிற்குப் புது வாகனம் கிடைத்த காரணத்தால், கரடிமணியின் காலை உடைத்து அவனை வீழ்த்தி, ஓட்டையாகிப் போன அவரின் மிதிவண்டி, பழுதுநீக்கப்படாமல், அவருடைய வெற்றியின் நினைவுச் சின்னமாக, அவருடைய கொல்லைப் புறத்தில் இன்றும் பத்திரமாக அவரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதிக நாள் காவல்துறைக்குத் தண்ணி காட்டிக்கொண்டிருந்த கரடிமணியைப் பிடிக்க, தனிப்படை அமைத்து(!?), ஆக்கமும் ஊக்கமும் அளித்த(!?) (அப்படித்தான் போலிஸ் ரெக்கார்டில் பதிவாகியிருக்கிறது!) சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமிக்கும் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு கிடைத்தது.

காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, திண்டுக்கல் மாவட்டத்தில், தலையில்லா முண்டம் பற்றிய வதந்தியும் மெல்ல மெல்ல அடங்கியது.

தன்னிகரில்லாத் தனது சேவையின் மூலம், பலருக்கு இழப்பையும் சிலருக்கு வளத்தையும் அளித்த தலையில்லா முண்டம், தனது அடுத்த இலக்கை நோக்கி அதி வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தது.


முற்றும்.




Related Posts Plugin for WordPress, Blogger...